என் வாழ்க்கையில் 20 வருஷத்தை மிஸ் பண்ணிட்டேன்.. அதுனால டக்குனு சொல்லிடுறேன்!
சென்னை: ஒரு காலத்துல பெண்களை பார்த்து "எனக்கு உங்களை பிடிக்கும்" என்று சொல்வதே பசங்களுக்கு ஒரு கனவு மாதிரி விஷயம்தான். அந்தக் காலத்து காதல் ஒரு பார்வையில் தொடங்கி, ஒரு சிரிப்பில் மலர்ந்து, ஒரு வார்த்தை பேசும் தைரியம் கூட மாதக்கணக்கு ஆகும்.
ஒரு கடிதம் எழுதிச் சொல்லணும்னா, அந்தக் கடிதத்தை எழுதும் போதே கையெல்லாம் நடுங்கும். நண்பர்களிடம் "இது சரியா இருக்கும்?" என்று கேட்டுக்கொண்டு திருத்தம் செய்து, அப்புறம் அந்தக் கடிதம் அவரிடம் கொடுக்க படும் பாடே ஒருவித அனுபவத்தை கொடுக்கும். அந்தப் துடிப்புதான் அந்தக் காலத்து காதலின் அழகு.

ஆனா இன்றைய இன்டர்நெட் யுகத்தில் அந்த மெல்லிய உணர்ச்சிகள் எல்லாம் வேகத்தில் தொலைந்து போய்விட்டது. இப்போ காதல் சொல்லணும்னா ஒரு மெசேஜ் போதும் "ஹாய் ", "நீங்க அழகா இருக்கீங்க", "உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு " என்று சொல்லி விடுகிறார்கள். சில நிமிடங்களில் பதில் வந்துவிட்டால் சரி; இல்லையெனில் அடுத்தவர்க்கு மெசேஜ் செய்யலாம் என்ற தைரியம் கூட இருக்கிறது.
அந்தக் காதல் ஒரே ஒரு குறுஞ்செய்தியில் தொடங்கி முடிந்துவிடுகிறது. உணர்ச்சி இல்லை, எதிர்பார்ப்பு இல்லை, வெறும் டிஜிட்டல் மாதிரி. ஈசியாக எதாவது மாய வார்த்தைகளை பேசி காதல் செய்ய வைத்து விடுகிறார்கள். இதுவும் இப்போ இருக்கும் சிலருக்கு தெரியவில்லை என புலம்பி வருகிறார்கள்.




















Click it and Unblock the Notifications