ஒரே ஒரு ஷோ தான்.. கொண்டாட்டத்தில் மீம்ஸ் க்ரியேட்டர்கள்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி பல ஆண்டுகளாக பார்வையாளர்களின் மனதில் பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடும் சமூகத்துக்கு தொடர்பான முக்கியமான தலைப்புகளை எடுத்து வைத்து, இரு தரப்பாக பிரித்து விவாதம் நடத்துவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. தொகுப்பாளர் கோபிநாத் அவர்களின் சிந்தனைத் தூண்டும் கேள்விகளும், நேர்மையான நடுவர் பங்கும், நகைச்சுவை கலந்த பேச்சும் நிகழ்ச்சியை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன.
இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடு, சமீபத்தில் அதிகமாக பேசப்படும் தெரு நாய்கள் பிரச்சனை குறித்த விவாதமாக இருந்தது. நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று ஆதரித்தவர்களும், அவை சமூகத்திற்கு ஆபத்தானவை என்பதால் கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்த்தவர்களும் தங்கள் தரப்பில் வலுவான வாதங்களை முன்வைத்தனர். எபிசோடின் ப்ரோமோ வெளியாகும் தருணத்திலேயே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் கிளம்பின. நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு அதில் சிலர் கூறிய கருத்துகள் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், அதை எதிர்த்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் மீம்ஸ்களும் மழைபோல் பரவின.

மேலும் கோபிநாத் கேட்ட சரமாரியான கேள்விகள் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. இந்த விவாதத்தைச் சுற்றி சமூக வலைத்தளங்களில் பல்வேறு ரைட்டப்களும் நகைச்சுவை மீம்ஸ்களும் பரவிக் கொண்டிருக்கின்றன. மீம் க்ரியேட்டர்கள் கூட, "இப்படிப் பல விவாதங்களை கொண்டு வந்தால் நாங்களும் குஷியாக இருப்போம்" என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருவது சுவாரஸ்யமாகியுள்ளது.



















Click it and Unblock the Notifications