நான் அடிச்ச மணி யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ.. ஆர்டர் வந்துருச்சு டா
சென்னை: இந்தியாவில் தெருநாய்கள் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிய பிரேக்கிங் நியூஸ் மாதிரி ஆகிக்கிட்டே இருக்குது. சின்ன வயசுல நாயை பார்த்தா பயமான்னு கேட்ட நம்மதான், இப்போ ரோட்டுல நடக்கும்போது *"பாதுகாப்பா போவோமா? இல்ல பைக்கில் போகும்போது கொஞ்சம் தள்ளிப் போயிடலாமா?"*ன்னு யோசிக்கிறோம்.
சென்னையிலோ, பெரிய நகரங்களிலோ நிலைமை ரொம்பவே மோசம். கூட்டம் கூட்டமா தெருநாய்கள் வீதி தோறும் நடந்து போறத பாத்தாலே உயிர் பயம் வந்துவிடும். அதுவும் ராத்திரி நேரங்களில் பைக்கில் போகும் போது, நமக்கு கொஞ்சம் த்ரில் கொடுக்குற மாதிரியே பின் தொடர்ந்து ஓடி வரும். அந்த நேரம் பைக் ஓட்டுறவன் என்ன நிலைமையில் இருப்பான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும். சில சமயம் சில தெருக்களில் நிறைய நாய்கள் இதே வேலையாவே இருக்கின்றன.

இது மட்டும் இல்ல, குழந்தைகளை கடிக்கிற சம்பவங்களும் அதிகமாக நடக்குது. இந்த பிரச்சனை இப்போ கோர்ட் வரை போயிருக்கு. இதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும் உண்டு, எதிராக குரல் கொடுத்தவர்களும் உண்டு. ஒருபக்கம் "மனிதன் பாதுகாப்பு"ன்னு பேசுறாங்க; இன்னொரு பக்கம் "விலங்குகளுக்கும் உயிர் உண்டு"ன்னு வாதங்கள் சமூக வலைத்தளங்கில் சுற்றி வருகின்றன.
நாய்களின் தாக்குதலால் ஏற்படும் காயங்கள், ரேபிஸ் தொற்று அபாயம், மற்றும் வாகன விபத்துகள் ஆகியவை பொதுமக்களின் பாதுகாப்பை பெரும் சவாலாக மாற்றியுள்ளன.



















Click it and Unblock the Notifications