அப்போ எங்க மூஞ்சிய எல்லாம் பார்த்தா இந்தி படிக்க தெரிஞ்சா மாதிரி இருக்கா?
தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து சமூக வலைதளங்களில் கலக்கல் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் உள்ள மைல் கல்களில் இந்தியில் பெயர் எழுதப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழர்கள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை கலாய்த்தும் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயலும் பாஜக அரசைக் கண்டித்தும் இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இதோ உங்கள் பார்வைக்கு..
அவங்க ஏன் இங்கே வர்றாங்க?
அப்ப ஏன்ணே இந்தி தெரிஞ்ச வட மாநிலத்துக்காரங்க இங்க வந்து கூலி வேலை பார்க்கிறாங்க என கேட்கிறது இந்த மீம்..
ஆனா அது காங்கிரஸ் ஆட்சி...
இந்தியில் மைல் கல் வைக்க அனுமதி கையெழுத்து போட்டது அன்றைய அமைச்சர் திமுக டிஆர் பாலு: அது நாங்கதான் ஆனா அது காங்கிரஸ் ஆட்சி...
புலிக்கு வந்த சோதனை..
சென்னையல் இருந்து சென்ற புலி இந்தி மொழி புரியாமல் தவிப்பு.. என்னடா இது புலிக்கு வந்த சோதனை..
பெருமையாக நினைக்கிறேன்
எனக்கு இந்தி தெரியாததை நான் தகுதி குறைவாக கருதவில்லை என் இன எழுச்சியின் பெருமையாக நினைக்கிறேன்...சகாயம் ஐஏஎஸ்
இந்தி படிக்க தெரிஞ்சா மாதிரி இருக்கா?
தமிழ் தெரியாத வட நாட்டுல இது மாதிரி தமிழ்ல எழுதுவிங்களா? எழுத மாட்டோம் அவங்களுக்கு தமிழ் படிக்க தெரியாது... அப்போ எங்க மூஞ்சிய எல்லாம் பார்த்தா இந்தி படிக்க தெரிஞ்சா மாதிரி இருக்கா?












Click it and Unblock the Notifications