இந்தியாவிலேயே! ஏன் வேர்ல்ட்லேயே!! வாட்டருக்கு ஃபால் சீலிங் போட்டது நம்ம செல்லூர் கோஷ்டி தான்!!
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லலூர் ராஜு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துள்ள புதுமுயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனை கலாய்த்து இணையதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு போர்த்தப்பட்டது.
ஆனால் போர்த்தப்பட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் அமைச்சரின் திட்டத்துக்கு மாறாக கரை ஒதுங்கியுள்ளது. செல்லூர் ராஜுவின் பிளான் புஸ்ஸானதை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்..
நம்ம செல்லூர் கோஷ்டி தான்!!
இந்தியாவிலேயே! ஏன் வேர்ல்ட்லேயே!! வாட்டருக்கு ஃபால் சீலிங் போட்டது நம்ம செல்லூர் கோஷ்டி தான்!!
என்ன ஒரு புத்திசாலித்தனம்
என்ன ஒரு புத்திசாலித்தனம்.. என அமைச்சரின் தெர்மா கோல் திட்டத்தை கலாக்கிறது இந்த மீம்..
குப்பைகளை அகற்ற நிதி
வைகை ஆற்றை சுற்றி உள்ள தெர்மாகோல் குப்பைகளை அகற்ற ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கினார் எடப்பாடி என கலாக்கிறது இந்த மீம்..
அந்த மொமண்ட்
இதைத்தான் நைட்டெல்லாம் ஒட்டிக்கிட்டு இருந்திகளா மொமண்ட் என கலாய்க்கிறது இந்த மீம்..