அடுத்த தேர்தலுக்குள்ள எப்படியாவது ஆர்.கே.நகரில் குடியேறிடனும்.. நெட்டிசன்கள் மரண 'கலாய்'
சென்னை: பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவில் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இதையடுத்து மீம்களும் சோஷியல் மீடியாவில் சுற்றி வர ஆரம்பித்துள்ளன. பெரும்பாலும் டிடிவி தினகரனை வாருவதாகவே மீம்கள் உள்ளன. தீபாவையும் கிண்டல் செய்ய அவை தவறவில்லை.
தீபா ஜாலியாக வீட்டில் பொழுது போக்கிக்கொண்டிருந்த நிலையில் திடீரென வெயிலில் பிரசாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இப்போது அவர் நிம்மதியாக இருக்கலாம் என்றும் மீம்கள் கூறுகின்றன.
|
தீபா நிலைமை
தீபா நவ், அப்பாடா ரத்து பண்ணிட்டாங்களா இனி நிம்மதியா தூங்கலாம், என கூறுகிறது இந்த டிவிட். பிரசாரத்தின்போது இவருக்கு ஒரு பெண்மணி குடை பிடித்தபடி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
|
தேர்தலே தள்ளிப்போகிறது
அம்மா இல்லைன்னு தேர்தலையெல்லாம் தள்ளி வைக்கிறீங்களே.. அம்மா இருந்தவரை தமிழ்நாட்ல விஜய் அண்ணா படம் மட்டும் தான் தள்ளி போகும்... என்கிறது இந்த டிவிட். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடிகர் விஜய் திரைப்படங்களை தடை செய்யும் போக்கு இருந்தது நினைவிருக்கலாம்.
|
இன்சூரன்ஸ்
இனி வருங்காலங்களில் தேர்தல்களையும் இன்ஸுரன்ஸ் செய்யனும், என்கிறது இந்த டிவிட். தேர்தலுக்காக செலவு செய்த பணம் எல்லாம் வீணாக போய்விடும் என்பதால் இன்சூரன்ஸ்தான் பெஸ்ட் என்பது இந்த நெட்டிசன் கருத்து.
|
இது நல்ல ஐடியா
இப்படியே ஒரு நாளுதடவ புல்லா பணம் கொடுத்ததுக்கு அப்பறம் கேன்சல் பண்ணி விட்டா கடுப்பாகி அவனுகளே பணம் கொடுக்கறத நிறுத்திருவாங்க, என்கிறது இந்த டிவிட். எப்போது தேர்தலை நிறுத்துவாங்க என்பதை கணிக்க முடியாமல் இப்படியே செய்து கொண்டிருந்தால் பணம் கொடுக்கும் கலாசாரம் குறைந்துவிடுமல்லவா.
|
எடப்பாடியார் ஹேப்பி
எடப்பாடி நவ் அப்பாடா என் பதவி தப்பிச்சுது.. என்கிறது இந்த மீம். டிடிவி தினகரன் வெற்றி பெற்றிருந்தால் அடுத்ததாக முதல்வராக காய் நகர்த்துவுார் என்று கணிக்கப்பட்டிருந்தது.
|
பணம் கிடைக்கும்ல
அடுத்த இடைத்தேர்தலுக்குள் ஆர்கே நகருக்குள் ஒரு வீடு பார்த்து முகவரி மாற்றி வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துவிட வேண்டும்.. என்கிறது இந்த டிவிட். எப்படியும் அடுத்த முறையும் பல்க்காக பணம் சப்ளை செய்வார்கள் என்பதே கணிப்பு.












Click it and Unblock the Notifications