இதுக்கு நம்ம ஆதரவு கொடுக்கலைன்னா சோத்துக்கு பிச்சை எடுப்பது நிச்சயம்...!
சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டம் சென்னையையே அதிர வைத்தது.
சென்னை: கத்திப்பாரா ஜங்ஷனில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்திய போராட்டம் நடத்தினர். மேம்பாலத்துக்கு பூட்டுப் போட்டு அவர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையே ஸதம்பித்தது.
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இருப்பினும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என்பதால் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
இந்நிலையில் இளைஞர்களின் போராட்டத்தை பாராட்டியும் ஆதரவு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
வரலாறு இரக்கமற்றது..
இந்தப் போராட்டத்த ஒடுக்கிட்டதா சந்தோஷப்படாதீங்க.. எங்கெல்லாம் தொடர்ச்சியா மக்கள் போராட்டம் வெடிக்குதோ அடுத்ததா என்ன ஆகும்னு வரலாற திருப்பி பாருங்க இப்பவாது முழிச்சிட்டு மக்களுக்கு நல்லது செய்ங்க ஏன்னா வரலாறு இரக்கமற்றது..
பிச்சை எடுப்பது நிச்சயம்...
வந்துட்டான்டா என் இளைஞன்... இதுக்கு நம்ம ஆதரவு கொடுக்கலைன்னா சோத்துக்கு பிச்சை எடுப்பது நிச்சயம்...
இன்னும் என்ன பன்றீங்க...
விவசாயி கடன் தள்ளுபடிதான் குடுக்க முடியாதுனு சொல்லீட்டிங்... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு போட்டும் இன்னும் என்ன பன்றீங்க...
கௌம்பிட்டாங்களா...
விவசாயிகளுக்கு ஆதரவா சென்னை கத்திப்பாராவில் இளைஞர்கள் போராட்டம்... இளைஞர்கள் கௌம்பிட்டாங்களா... என சந்தோஷத்தை வெளிப்படுத்தி கேட்கிறது இந்த மீம்..
போராட ரெடி
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் போராட ரெடியாகிவிட்டதை வெளிப்படுத்துவதாக உள்ளது இந்த மீம்..












Click it and Unblock the Notifications