கிண்டி- தாம்பரம்- திண்டிவனம் ஜிஎஸ்டி வழியாதான் மன்னார்குடி போவேன்
சென்னை: ஜிஎஸ்டி குறித்து சமூகவலைதளங்களில் கிழி கிழி என கிழித்து வருகின்றனர். தியேட்டர் அதிபர்கள், வியாபாரிகள், ஹோட்டல் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பயங்கரமாக மீம்ஸ்களை போட்டு கலாய்த்த வண்ணம் உள்ளனர்.

ஜிஎஸ்டி நல்லா இருக்கே
ஜிஎஸ்டிதானே நல்லா இருக்கு. சிறந்தது. கிண்டி- தாம்பரம்- திண்டிவனம் ஜிஎஸ்டி வழியாதான் மன்னார்குடி போவேன்.

6 மாசத்துல மறுபடியும் பொறக்குமா
முதல்ல ஒரு புதிய இந்தியா பொறந்துச்சு. ஆனா ஆறு மாசம் கழிச்சு மறுபடியும் ஒரு புதிய இந்தியா பொறக்குதே அது எப்புடி?

பீட்சாவுக்கு வெறும் 5 சதவீதம் வரியா
ஒரு சாதாரண குடிசை தொழில் செய்ற வியாபாரிக்கு 18 சதவீதம் வரி. உலகம் முழுவதும் விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனத்துக்கு 5 சதவீதம் வரி. இப்ப சொல்லுங்க இந்த அரசு யாருக்கானது?

பிரெய்லிக்கு 18 சதவீதம்... ருத்திராட்சத்துக்கு 0 சதவீதம்
பார்வை இழந்தோர் பயன்படுத்தும் பிரெய்லி வகை எழுத்துகளை கொண்ட புத்தகம், மூன்று சக்கர நாற்காலிக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ருத்திராட்சம், நாமக்கட்டிக்கு 0 சதவீதம் வரியாம்.












Click it and Unblock the Notifications