டெய்லி 5 மணிக்கு எந்திரிக்கணும்னு நினைக்கிறேன்.. ஆனா தூக்கமே 5 மணிக்குதான் வருது!
சென்னை : மாதக் கடைசி வந்து விட்டாலே பணக் கஷ்டத்தோடு, மனக் கஷ்டமும் சேர்ந்து இரவில் தூக்கமே வருவதில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்போதெல்லாம் கை நிறைய சம்பாதித்தாலும், 'மெத்தை வாங்கினேன்... தூக்கத்தை வாங்கல" என்றுதான் மக்கள் புலம்புகிறார்கள். அந்தளவுக்கு பணப் பிரச்சினை மற்றும் மனப்பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் மாதக் கடைசி என்றால் கேட்கவே வேண்டாம்.
ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்கு மேலே, கையில் காசில்லை எனப் புலம்புபவர்கள், 25 தேதிக்கு மேல் அடுத்த மாதக் கமிட்மெண்ட்களை நினைத்து, இரவில் தூக்கம் வருவதில்லை எனப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர். இப்போதும் அப்படித்தான், 25 தேதிக்கு மேல் ஆகி விட்டதால், வழக்கம் போல் தங்களது புலம்பல்களை ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications