மதியம் 2.59 க்கு வந்துருந்தா என் ஆளு உன் மேல பாட்டில் வீசியிருப்பான்.. லகலக ஜீயர் மீ்ம்ஸ்!
மதியம் 2.59-க்கு வந்திருந்தா என் ஆளு உன் மேல பாட்டில் வீசியிருப்பான் என்று ஜீயர் குறித்து மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். கல் வீச்சு நடத்துவோம் என்று ஜீயர்கள் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் எதிர் வினைகள் வருகின்றன. சவுக்கு சங்கர் போட்டுள்ள சுளீர் மீம்ஸ்களை இங்கு பார்ப்போம்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து மேற்கோள் காட்டி பேசியது குறித்து கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும், அவர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்.
பின்னர் அதை வாபஸ் பெற்று சிறிது கால அவகாசம் கொடுத்தார். எனினும் வைரமுத்து மன்னிப்பு கோரவில்லை. எனவே அவர் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தொடங்கினார். பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம், கற்களை வீசுவோம் என்று ஜீயர் கூறியது குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை ரெடி செய்துள்ளனர்.
|
கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டாரு
ஜீயர் கிளம்பிட்டாரு. அய்யய்யோ ஜீயர் சோடா பாட்டிலோட கிளம்பிட்டாரு. இனி எத்தனை பேர் மண்டை உருல போகுதோ பகவானே.
|
ஜீயரின் ரியல் பேஸ்
தி ரியல் பேஸ் ஆஃப் ஜீயர், ஜீயர்னா பொட்டு வச்சு பொங்கல் சாப்பிடறவனு நெனச்சியா.. என்னோட் பழைய ரெக்கார்ட எடுத்து பாரு.
|
நானும் ரவுடிதான்
புது ரவுடி, இந்த ஏரியால நான் புதுசா பார்ம் ஆகியிருக்கேன். எங்கம்மா சத்தியமா நான் ரவுடியா.
|
இன்று ஜீயர் இரவு
இன்று ஜீயர் இரவு, இந்த ஜீயரெல்லாம் ரவுடியா இறங்கிட்டா கோயில் அட்மாஸ்பியரை பற்றி நெனச்சு பாருங்களேன்.
|
2.59-க்கு வந்திருந்தா...
மணி மதியம் மூணு. 2.59 க்கு வந்துயிருந்தியினா என் ஆளு உன் மேல சோடா பாட்டில் வீசியிருப்பான்
|
மீம் போட்டு கிண்டல்
ஒரு ஆன்மீகத் தலைவரை, ஆண்டாள் பக்ததை இப்படி மீம் போட்டு கிண்டல் செய்வதைப் பார்த்தால் மனது வேதனையில் விம்முகிறது.












Click it and Unblock the Notifications