Mathuraiனு எழுதியது சரிதான்.. டீச்சர் ஒரு மார்க் போடுங்க.. 5ம் வகுப்பு டீச்சரிடம் நெட்டிசன்கள் லந்து
சென்னை: 5ஆவது வகுப்பில் Madurai என்பதற்கு பதிலாக Mathurai என எழுதியது இப்போது சரிதான். எனவே 5ஆம் வகுப்பு ஆசிரியர் எனக்கு ஒரு மார்க் கொடுக்க வேண்டும் என பெயர் மாற்றம் குறித்து நெட்டிசன்கள் லந்து செய்கிறார்கள்.
தமிழக அரசு 1018 நகரங்களின் ஊர்களை அதன் தமிழ் உச்சரிப்பிற்கேற்ப பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பலர் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் கொரோனா கொள்ளை நோய் தீவிரமான நிலையில் இந்த பெயர் மாற்றமெல்லாம் தேவைதானா என கேள்வி எழுப்புகிறார்கள்.

எப்படி உச்சரிப்பது
இந்த பெயர்களை உச்சரிப்பது வட இந்தியர்களுக்கு மிகவும் சிரமமாச்சே!

ரொம்ப முக்கியமா
கொரோனா பிரச்சினை தலைவிரித்தாடும் போது இந்த பெயர் மாற்றம் ரொம்ப முக்கியமா?
|
காமெடி சீன்
நாங்கள் Veeloorக்கு புலம்பெயர்வதால் இந்த காமெடியை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு அர்ப்பணிக்கிறோம் என்கிறார் ஒரு வலைஞர். இதில் மாது, சீனு நடித்த காமெடி சீன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெல்லிங்
எனக்கு ஒன்று புரியவில்லை. ஆங்கில ஸ்பெல்லிங்கில் என்ன பிரச்சினை வந்துவிட போகிறது?

சந்தோஷம்
தமிழ் பெயர்களின் உச்சரிப்பிற்கேற்ப தமிழக அரசு ஊர்களின் பெயர்களை மாற்றியது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது இந்தியாவில் முடிவுக்கு வந்த ஆங்கில கலாச்சாரத்தின் ஆரம்பமாக இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.

அவதி
கொரோனா வேகமாக பரவி வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. ஊர்களின் பெயரை மாற்றி என்ன செய்ய போகிறோம்?

ஒரு மார்க்
நான் 5ஆம் வகுப்பு படித்த போது ஒரு கேள்விக்கு Madurai என்பதற்கு பதிலாக Mathurai என எழுதிவிட்டேன். தற்போது அரசே பெயர் மாற்றங்களை செய்துவிட்டதால் நான் எழுதியது சரிதான். அதனால் 5ஆம் வகுப்பு ஆசிரியர் எனக்கு ஒரு மார்க் கொடுத்தே ஆக வேண்டும்.












Click it and Unblock the Notifications