கம்பராமாயணத்தை எழுதியது ”சேக்கிழார்”- முதல்வர் எடப்பாடியார் பேச்சை முன்வைத்து நெட்டிசன்ஸ் வறுவல்
கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக முதல்வர் எடப்பாடியார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
தஞ்சாவூர்: கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என முதல்வர் எடப்பாடியார் பேசிய பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடியார், கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி இது என குறிப்பிட்டார். முதல்வரின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடியாரின் பேச்சை முன்வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சேகுவாரா?
கம்பராமாயனத்தை எழுதியது சேக்கீழாரா? சேகுவாரா? என கேள்வி எழுப்புகிறார் இந்த நெட்டிசன்.
|
ஆட்டய போட்டார் கம்பர்?
இந்த நெட்டிசனின் குசும்பு இது:
(கம்ப ராமாயாணத்தை எழுதியவர் சேக்கிழார்-எடப்பாடி)
.
அப்ப திருவள்ளுவர் இல்லியா மாம்ஷு...
.
அட சேக்கிழார் தான்பா..
அவர் தூங்குறப்ப கம்பர் ஆட்டய போட்ருப்பாரு.. எடப்பாடி வெவரமானவன்..எப்டி கண்டுபிடிச்சா..பார்த்தியா.அதா அதிமுக.
|
பெரியபுராணம் - பெரியாரா?
கம்ப இராமாயண த்தை எழுதியது சேக்கிழார் - எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேச்சு:
அப்ப தொல்காப்பியம் எழுதுனது தொல்.திருமாவளவனா இல்ல பெரியபுராணம் எழுதியவர் பெரியாரா?! கேக்றவன் கேக்குறவன் கேனயா இருந்தா மணிமேகலை எழுதுனது மாணிக்கவாசகர்னு சொல்லுவாய்ங்க
|
ஒவையாரா?
கம்பராமாயணம் எழுதியது #சேக்கிழார் - எடப்பாடி
அப்போ ராமாயணம் எழுதியது
#ஔவையார் ஆ...
😂
|
கம்பராமாயணம்
கம்பராமாயணம் எழுதுனது சேக்கிழார் காமர்ஸ் பத்தி எழுதுனது கம்பர் என்கிறார் இவர்.