For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்போ அந்த இட்லியை சாப்பிட்டது யாரு? நெட்டிசன்ஸ் குசும்பு!

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்தான் என பொய் சொன்னதாக அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருப்பதை வச்சு செய்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு காய்ச்சல்தான் என பொய் சொன்னதாக அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியிருப்பதை வச்சு செய்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பிய உடனேயே உண்மையை கொட்ட தொடங்கிவிட்டார் பிரதாப் ரெட்டி. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில்தான் அனுமதிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

மக்கள் அச்சப்படக்கூடாது என்பதற்காக உண்மையை மறைத்து காய்ச்சல் என அறிக்கை விட்டதாகவும் அவர் கூறினார். இதுபோதாதா நெட்டிசன்களுக்கு, அவரை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.

இட்லியை சாப்பிட்டது?

ஜெ.வுக்கு காய்ச்சல் என பொய்யாக அறிக்கை தந்தோம்: பிரதாப் ரெட்டி.. அப்போ அந்த இட்லியை சாப்பிட்டது ??

இப்படி பொய் சொல்றாங்க?

பிரதாப் ரெட்டி சேகர் ரெட்டி விஷால் ரெட்டி எல்லாம் ரெட்டியும் ஏன் இப்படி பொய் சொல்றாங்க?

சொல்லுங்க நடிப்பா?

ஆபத்தான நிலையிலேயே ஜெ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், மக்காள் அச்சப்படாமலிருக்க, சட்டம் ஒழுங்குபிரச்சனை காரணமாய் மறைத்தோம்-பிரதாப்ரெட்டி, அப்போ அம்மா இட்லி சாப்டது, டிவி பாத்தது, கைரேகை வச்சது, அத்தனையும் நடிப்ப்ப்ப்பா? சொல்லுங்க நடிப்பா?

உயிரோடு இருந்தாரா?

Mr. பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா உயிரோட இருந்தாரா?

‘சட்டி'யை ரெட்டி உடைச்சுட்டார்

ஜெயலலிதா உடல் நிலை குறித்து தவறான தகவல் வெளியிட்டது உண்மைதான் - பிரதாப் ரெட்டி# கடைசியாக "சட்டி'யை ரெட்டி உடைச்சுட்டார்.

English summary
Netizens making fun of Apollo pradhap reddy for hiding truth abouth Jayalalitha health and treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X