ஏரி நிறைஞ்சு சந்தோஷப்பட்டா அது கிராமம்.. ஷாக்கானா அது சென்னை மாநகரம்... நெட்டிசன்ஸ் ரகளை!
சென்னையில் பெய்து வரும் மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குசும்புதனமான கருத்துக்கனை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
சென்னை: சென்னையில் பெய்து வரும் மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குசும்புதனமான கருத்துக்கனை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் இரவில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மழை குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குறும்புத்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில
|
ஊரையே கடலாக்கிட்டோம்
ஆத்துல ஏரியில தண்ணிய பார்த்து வருசம் ஆச்சு
அதான் ஊரையே கடலாக்கிட்டோம்... என்கிறார் இந்த வலைஞர்
|
ஷாக் ஆனால் அது சென்னை
மழை பெய்து ஏரி குளம் நிறையுதுன்னு சந்தோஷப்பட்டா அது கிராமம்
அதே ஏரி நிறையுதா! என்று ஷாக் ஆனால் அது சென்னை மாநகரம்... என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
நானாவது சுத்தம் செய்கிறேன்
"நாறிகிடக்கும் நகரத்தை நானாவது சுத்தம் செய்கிறேன்!" என சொல்லாமல் சொல்கிறது #சென்னைமழை! என்கிறார் இந்த வலைஞர்
|
முதல்ல இருந்து பெய்யறேன்
#சென்னை: "யோவ் 5 நாளாச்சுய்யா கிளம்புய்யா...!!"
#மழை : "நீ கணக்கு தப்பா சொல்ற... இரு நான் முதல்ல இருந்து பெய்யறேன்.. என பெய்கிறதாம் சென்னை மழை என்று கலாய்க்கிறது இந்த மீம்
|
போராட வைத்துவிட்டார்கள்
கடைசியில் மழையையும் போராட வைத்து விட்டார்கள்... என கூறுகிறார் இந்த நெட்டிசன்...
|
கூல்.. கூல்.. சென்னை மழை
குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல் #சென்னைமழை... என்கிறார் இந்த நெட்டிசன்..