மழையும் அரசியல்வாதி ஓட்டு கேக்க வர்ற மாதிரி எப்போதாவதுதான் மத்த ஊருக்கு வருது!
சென்னையில் பெய்யும் மழையையும், ஏரிகளின் ஆக்கிரமிப்பால் மக்கள் படும் இன்னல்களையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: மழையையும், ஏரிகளின் ஆக்கிரமிப்பால் மக்கள் படும் இன்னல்களையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெய்யும் மழையையும் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டுள்ள இன்னல்களையும் சமூக வலைதளங்களில் மக்கள் கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சுற்றி வளைத்துவிட்டது
தன்னை அழித்தவர்களை எல்லாம் சுற்றி வளைத்துவிட்டது-- சென்னை மழை... என்கிறது இந்த டிவிட்
|
எப்போதாவது தான் வருது
மழை நம் அரசியல்வாதிகள் போல ஆயிடுச்சு.
சென்னை மட்டுமே பிடிச்சிருக்கு.
மற்ற ஊர்களில் வோட்டு கேட்க வருவது மாறி.
எப்போதாவது தான் வருது... என்கிறார் இந்த நெட்டிசன்
|
இப்ப மழை இருக்கு..
இது பகலா இரவா என்றே தெரியாத வண்ணம் இருள் சூழ்ந்து சென்னை! இருக்கு இப்ப மழை இருக்கு!!
#சென்னைமழை என்கிறார் இந்த வலைஞர்
|
மேகம் பார்த்த பூமி
வானம் பார்த்த பூமி!!
மேகம் பார்த்த பூமியாகிபோனது!!
#சென்னைமழை.. என டிவிட்டியுள்ளார் இந்த வலைஞர்
|
வெளியேற நேரிடுகிறது..
அழையா விருந்தாளியாக வீட்டுக்குள்
மழை வருகையில் வீட்டு
உரிமையாளரே வெளியேற
நேர்கிறது. #சென்னைமழை... என்கிறது இந்த டிவிட்
|
நீ தான் தைரியமான ஆளாச்சே
நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
மழை: நனஞ்சி பார்ரா நனஞ்சி பாரு.. நீ தான் தைரியமான ஆள் ஆச்சே... என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்..
|
சேமிச்சா கிராமம்
#மழை'பேஞ்சா அடுக்குமாடி மேலேயும் மழை தண்ணி நின்னா அது நகரம், மாடியே இல்லாத வூட்டுலயும் மழை தண்ணிய சேமிச்சுவச்சு மிருகத்துக்கும் வச்சா #கிராமம் என்கிறார் இந்த வலைஞர்..












Click it and Unblock the Notifications