சென்னையே வெள்ளத்தில மூழ்கி இருந்தபோது கூட திறக்காத கதவுய்யா அது.. பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க?
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றிரவு அதிரடி ரெய்டு நடத்தினர். அதிகாலை வரை நீடித்த இந்த ரெய்டில் லேப்டாப், பென்டிரைவ், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஜெயலலிதா வீட்டில் 21ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..
|
மன்னார்குடி ஏழைகளுக்கு
மக்களிடம் கொள்ளையடித்து மன்னார்குடி ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த லேடி ராபின் ஹூட் வீட்டை இன்சல்ட் பண்ணிடாங்களாமே..
|
இத்தனை சொத்தான்னு பொறாமை
சசிகலா அன்ட் கோ : ஏங்க எங்க குடும்பத்துல மட்டும் ரெய்டு நடத்துறாங்க...
தமிழக மக்கள் : அது ஒன்னுமில்லைங்க.. சிடி வித்த பொம்பளைகிட்ட இத்தனை சொத்தான்னு பொறாமைங்க...
|
ரெய்டு பண்ண சொல்லியிருக்கும்
இதுவும் அம்மாவின் ஆன்மா வருமான வரி ஆதிகாரிகள் கனவிலே வந்து ரெய்டு பண்ண சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறோம் - மாண்பு மிகு அமைச்சர்கள் தமிழ்நாடு
|
பிழையை சரிசெய்ய முடியும்
ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக சசிகலா குடும்பத்தினர் செயல் பட்டனர் என்பதற்கான ஆதாரம் எதாவது இந்த போயஸ்கார்டன் சோதனையின் மூலம் வெளி வந்தால்தான், இந்த அரசியல் பிழையை சரி செய்ய முடியும்
|
சட்டப்படி சரிதான்
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை சட்டப்படி சரிதான். ஆனால் அரசியல் ரீதியாக மோடி அரசு செய்த மிக பெரிய பிழை.
|
பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க?
சென்னையே வெள்ளத்தில மூழ்கி இருந்தபோது கூட திறக்காத கதவுய்யா அது...
இப்படி பொசுக்குன்னு தொறந்தீட்டீங்க?












Click it and Unblock the Notifications