ஒரு படம் வந்தால்தான் நமக்கெல்லாம் சூடு சொரணை வருகிறது #அறம்
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள அறம் படத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள அறம் படத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் அறம். இந்தப் படத்தை இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார்.
சமூக பிரச்சனையை எடுத்து சொல்லும் படம் என்றும் நயன்தாராவின நடிப்பு அற்புதம் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளினர். இதையடுத்து படம் சூடுபிடித்துள்ளது. அறம் படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து..
|
என்னன்னு வாழ்த்துவது
படத்தின் பெயர் கூட தமிழ்லில் இல்லாத மெர்சல் பத்தி பேசுகின்ற இந்த நாட்டில் அறம் பற்றி பேச ஆள்ளில்லாதது வர்த்தம் தருகிறது. ஒரு டயலாக் வைச்சு பெயர் வாங்கும் விஜய், அப்ப ஜோக்கர் படத்தை என்னன்னு வாழ்த்துவது.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
தமிழ் சினிமாவில்
#கத்தி மாதிரி #மெர்சல் மாதிரி #அறம் இனி தமிழ் சினிமாவில்.. என்கிறது இந்த டிவிட்
|
நிறைய படம் வரும்
ஒரு படம் வந்தால்தான் நமக்கெல்லாம் சூடு சொரணை வருகிறது #மெர்சல் #அறம் நிறைய படம் வரும்.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சூப்பர்.. அறம்
மக்களுக்காக மக்கள் நலனுக்காகத்தான் சட்டம் , ஒரு சட்டத்தை இயற்றி அதற்குள் மக்களை அடைக்க முயற்சிக்க கூடாது ( பணமதிப்புழப்பு , மாட்டுக்கறி திண்க கூடாது என்பது போல ) சூப்பர் #அறம்.. என்கிறது இந்த டிவிட்
|
சிலாகிச்சு பேசணும்னு..
#அறம் படம் பார்த்துட்டு யார்கிட்டயாது அந்தப் படத்தைப் பத்தி சிலாகிச்சு பேசணும்னு தோணும்... என்கிறார் இந்த நெட்டிசன்..
|
நல்லா இல்லாமையா போய்விடும்
"அறம் " என்று பெயர் வைத்த பிறகு நல்லா இல்லாமையா போய் விடும்... என கேட்கிறார் இந்த வலைஞர்..