ஆளுக்கு ரூ. 200 கொடுத்துடுங்க சார்.. போற வழியில புகாரில சாப்டுக்கறோம்!
ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்
Recommended Video
சென்னை: ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
ரசிகர்களிடம் பேசிய உங்களுக்கு எல்லாம் கடா வெட்டி கறி சோறு போட ஆசையாக உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் இங்கு அது முடியாது வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று கூறினார் ரஜினி. இதனை வைத்து நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
|
புகாரில சாப்டுக்கறோம்..
ராகவேந்திரா கல்யாண மண்டபம் ப்யூர் வெஜிடேரியன். அதனால உங்களுக்கு கிடா வெட்டி கறிசோறு போட முடியல @ ரஜினி
அவ்வளவு நல்ல மனசு இருந்தா ஆளுக்கு 200 ரூவா கொடுத்துடுங்க சார்..
போற வழியில புகாரில சாப்டுக்கறோம்.. கூட்டத்தில் இருந்து ஒரு குரல்
|
ஆசையை தூண்டனும்..
சதுரங்கவேட்டை1:"ஜெயிக்க வச்சிட்டு 20ரூவா நோட்டைகாட்டி பத்தாயிரம் வாங்கிக்கோ-தினகரன்
ச. வே2:"கிடாவெட்டி கறிசோறு-ரஜினி
#தட் ஒருத்தன ஏமாத்த அவன் ஆசைய தூண்டனும் மொமண்ட்
|
கிளப்பிவிட்டது யாரு?
கோயமுத்தூர்காரனுக கறிசோறு சாப்பிட மாட்டானுகன்னு கெளப்பி விட்டவன் எவன்டா?!
|
எங்கப்பா மாதிரியே..
நானும் எங்கப்பா மாதிரியே டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன்..
#பிரியாணி & கறிசோறு ட்வீட்
|
சிறகடிக்கும் ஆசை
சின்ன சின்ன ஆசை. சிறகடிக்கும் ஆசை.
#பிரியாணி & கறிசோறு ட்வீட்.
|
கறிசோறு போட்டாலென்ன..
ராகவேந்திரா மண்டபம்தானே கோயில் இல்லையே கறிசோறு போட்டாலென்ன. ஏன் அங்கு அசைவம் சாப்பிட கூடாதாம்
|
காதுகுத்தி அனுப்பப்போறாரு..
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து போட ஆசை - ரஜினி
பாய்ண்ட பிடிச்சிட்டேன் ...
ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து
போட்டோ எடுக்க 1000,5000 டோக்கன்
31ஆம் தேதி ரசிகர்கள் எல்லாத்துக்கும் காது குத்தி அனுப்ப போறாரு...
|
கண்ணால பாத்ததில்ல..
கிடா வெட்டி கறி சோறு போட ஆசை
-ரஜினி
ஆமாம் நாங்க கறியே கண்ணால பாத்ததில்ல சாமி!!!