இந்த ரணகளத்திலும் நெட்டிசன்களுக்கு கிளுகிளுப்பு.. அடாத மழையிலும் விடாது மீம்ஸ்
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் அதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் அதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் குடிநீருக்கே திண்டாடிய மக்கள் வடகிழக்குப் பருவமழையை கொண்டாடி வருகின்றனர். மழை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.
|
ப்ரயோஜனம் இல்லை
மெட்ராசுல மழைன்னா பத்து பைசாக்கு ப்ரயோஜனம் இல்லை இருக்கிற ஏரி, காவாய் எல்லாம் நாம்தானே குடி இருக்கோம் என்கிறார் இந்த நெட்டிசன்..
|
அளவா மழை பெய்யனும்
அளவா மழை பெஞ்சு எல்லோரும் பயன் பெறணும்.. என்கிறது இந்த டிவிட்
|
மனம் மறுக்கிறது என் மகிழ்ச்சியை
மழை! வந்ததும் மகிழ்ந்தேன். அம்மழைநீர் வீணாவதை கண்டு எனோ மனம் மறுக்கிறது என் மகிழ்ச்சியை! என்கிறார் இந்த வலைஞர்
|
பஜ்ஜி சாப்பிடுங்க
பஜ்ஜி சாப்பிடுங்க.. இது மழைக்காலம்.. என்கிறது இந்த மீம்
|
ஏமாந்துவிட வேண்டாம்
சென்னையில் தொடர் மழை வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கவும்.. ரோடு இருப்பதாக எண்ணி ஏமாந்து விட வேண்டாம்.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்
|
லீவு அறிவிச்சுட்டாங்களா?
மழையால் லீவு அறிவிச்சுட்டாங்களா? இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்கும்ன்னு மட்டும்தான் சொல்லிருக்காங்க.. என்கிறது இந்த மீம்












Click it and Unblock the Notifications