3 தடவ 200+.. ப்பா... என்னா வெறித்தனம்.. #ரோஹித் ஷர்மா!
மூன்றாவது முறையாக இரட்டை சதத்தை கடந்த ரோஹித் ஷர்மாவை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: பேயாட்டம் ஆடி மூன்றாவது முறையாக இரட்டை சதத்தை கடந்த ரோஹித் ஷர்மாவை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
மொகாலியில் நடக்கும் 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதமடித்தார்.
151 பந்துகளில் பந்துகளில் 13 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் சதமடித்து சாதனை படைத்தார். இது அவரது 3வது இரட்டை சதமாகும். இலங்கை அணிக்கு எதிராக எடுக்கும் 2வது இரட்டை சதமாகும். ரோஹித் ஷர்மாவின் இந்த பேயாட்டத்தை சமூகவலைதளங்களில் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவற்றில் சில
|
வித்தை காட்டும் ரோஹித்
எல்லாரும் கிரிக்கெட் விளையாடுனா.. இந்த ரோஹித் ஷர்மா மட்டும் எப்பவுமே 100 ரன்னை தாண்டுனாலே வேற ஏதோ வித்தை காட்டுறான்..
100 வரை தான் பிரச்சனை. அப்புறம் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூட கிட்ட நெருங்கமுடியாது போல அவ்வளவு அழகா / ஈஸியா இருக்கு ஷாட்லாம்
|
மகிழ்ச்சி வெள்ளம்
இன்றய தினம் ரோஹித் ஷர்மா திருமணம் முடித்து 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. திருமண நாளிலேயே இரட்டை சதமடித்து தனது மனைவியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கின்றார்
|
என்ன கோவமோ..
இன்னைக்கு ரோஹித் ஷர்மா கல்யாண நாளாம்.. என்ன கோவத்துல இருந்தானோ.. 200 ரன் அடிச்சு வெளுத்துட்டான்..
|
அந்த ஆனந்தம் வருமா?
என்னதான் ரோஹித் ஷர்மா டபுள் செஞ்சுரி அடிச்சாலும் , விராட் கோலிய ரன் அவுட் பண்ணி விட்டு டபுள் செஞ்சுரி அடிக்கிற ஆனந்தம் வருமா ?
|
முந்தைய உனக்கு தகுமா?
உன்னை போல் வருமா. முந்தைய ஆட்டம் உனக்கு தகுமா?
இன்றைய 200 தான் உனது கர்மா.
|
துடைத்துவிட்டார்..
ரோஹித் ஷர்மா தன் மேல் விழுந்த பழியை துடைத்து விட்டார்
|
என்னா வெறித்தனம்..
ரோஹித் ஷர்மா.. 3 தடவ 200+.. ப்பா... என்னா வெறித்தனம்..
|
தாறுமாறு..
தாறுமாறு வாழ்த்துக்கள் ரோஹித் ஷர்மா.












Click it and Unblock the Notifications