ச்சை.. ஆவணி மாசம் பொறந்தாபோதுமே.. தினமும் யாராவது பத்திரிகை வைக்க வந்துடுறாங்க!
சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்து விட்டதால், கல்யாணம், காதுகுத்து என தினமும் யாராவது வீட்டிற்கு பத்திரிகை வைக்க வந்து விடுவதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆடி மாதம் நம்மூரில் பெரும்பாலும் கல்யாணம், காதுகுத்து போன்ற வைபவங்களை வைக்க மாட்டார்கள். அதுபற்றிய வேலைகளில்கூட ஈடுபட மாட்டார்கள். அதனாலேயே ஆடி மாதம் எப்போது முடியும் எனக் காத்திருந்து, ஆவணியில் வேலையை ஆரம்பிப்பார்கள்.

அப்படியாக, தற்போது ஆவணி பிறந்து விட்டதால், கல்யாணம், காதுகுத்து, புதுவீடு புகுவிழா என மக்கள் மீண்டும் பத்திரிகையும் கையுமா அலையத் தொடங்கிவிட்டனர். இதனால், போனமாதம் பட்ஜெட்டில் விட்டுப் போன மொய்யை இந்த மாதம் டபுள், டிரிபிளாக எழுதி வருகின்றனர் மக்கள். பிறகென்ன இதை வைத்து மீம்ஸ் போடத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
சைடுகேப்பில் ஆடி மாதம் பிரிந்திருந்த புதுமணத் தம்பதிகள், ஆகஸ்ட் மாதம் என எல்லாவற்றையும் கலந்து கட்டி கலாய்த்துள்ளனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications