ஆத்தி மாடா இது.. ரொம்ப பயங்கரமான சின்சான் ஃபேனா இருப்பாங்க போலருக்கே!
சென்னை: மாட்டுப் பொங்கலுக்கு வீட்டு வாசல்களில் வரையப்பட்ட மாடு கோலங்களை வைத்து இன்னமும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தைப்பொங்கலுக்கு வீட்டு வாசலில் பொங்கல் பானை வரைவதும், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டின் உருவத்தை வரைவதும் நம் மக்களுக்கு தொன்று தொட்டு இருந்து வரும் வாடிக்கைகளுள் ஒன்று. ஆனால், வர வர அதில் கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, மாட்டின் கையிலேயே கரண்டியைக் கொடுத்து, பொங்கல் பானையைக் கிளற வைப்பது, மாடுக்கு சுடிதார் அணிவித்து அழகு பார்ப்பது என வேற லெவலில் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
அவர்கள் அப்படி வரைந்தே பழகி விட்டார்கள் என்றால், நம் மீமர்களும் சளைக்காமல் அவர்களைக் கலாய்த்தே பழகி விட்டனர். அதனால்தான் மாட்டுப் பொங்கலுக்கு வரையப்பட்ட மாடு கோலங்களை, காணும் பொங்கல் வரை வைத்து ரசித்து, ருசித்து கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பார்த்ததும் சிரிப்பை வர வைக்கும் மாடு கோலங்களைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

























Click it and Unblock the Notifications