இந்தப் பயல நம்பி அங்க இங்க போக முடியல.. திருட்டுத்தனமா ஆம்லெட் போட்டுத் தின்னுர்றான்!
சென்னை : புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால், பெரும்பாலான வீடுகளில் இன்று விரதம் என சாம்பார் கமகமத்தது. இதனால் அசைவம் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள், மீம்ஸ் போட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் பல வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். ஹோட்டல்களிலும் சாப்பிட தடைதான். இதனால் இந்த புரட்டாசி மாதம் எப்போது முடியும் என அசைவ உணவுப் பிரியர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை கறி, மீன், நண்டு, இறால் என அசைவம் சாப்பிட முடியாதே என்ற ஆதங்கத்தில் இருக்கும் அவர்கள், இன்று புரட்டாசி சனி என சாம்பார் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானதால், இன்றும் சாம்பார், நாளையும் சாம்பாரா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications