ஏன்டா இப்டி இடையில சிந்து பாடி அவமானப்படுத்திட்டியே.. இனி யாருடா என்னை மதிப்பாங்க!
சென்னை : மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருப்பது மக்களை எந்தளவுக்கு சந்தோசப்படுத்தி இருக்கிறது என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
இந்தாண்டு பிப்ரவரி கடைசியிலேயே வெயில் வாட்டத் தொடங்கிவிட, இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் எல்லாம் என்னதான் செய்யப் போகிறோமோ என அப்போதே கவலைப்பட ஆரம்பித்து விட்டனர் நம் மக்கள். அதுவும் குறிப்பாக அக்னி நட்சத்திரம்தான் அவர்களது பெரிய பயமாகவே இருந்தது. மக்களின் அந்த பயத்தை மேலும் அதிகரிப்பதுபோல், அவ்வப்போது கோடைமழை பெய்தாலும், வெயில் தன் பங்கிற்கு கொளுத்தி எடுத்தது.
ஆனால் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், சென்னையில் கடந்த சில தினங்களாக இரவில் காற்றுடன் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பகலில் வெயில் கொளுத்தினாலும், இரவில் மழை வந்து, அதனை சமன் செய்து விடும் என மக்கள் அதனைக் கண்டு கொள்வதில்லை.
ஆனால், மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் வெயில் கொளுத்தி வருவதால், அம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வெயில் பற்றிய மீம்ஸ்களையும், மழை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மழை மீம்ஸ்களையும் பகிர்ந்து, இணையத்தையும் சமன் செய்து வருகின்றனர். "ஏன்டா இப்டி இடையில சிந்து பாடி என்னை அவமானப்படுத்திட்டியே.. இனி யாருடா என்னை மதிப்பாங்க!" என அக்னி நட்சத்திரமே புலம்புவது போல் உள்ள மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications