ஆக மொத்தம் இதோட 250 பேருக்கு என் மார்க்கை சொல்லிட்டேன்.. சியர்ஸ்!
சென்னை : பொதுத்தேர்வு முடிவுகள் வந்தாலும் வந்தது, சமூகவலைதளப் பக்கங்களில் எங்கு பார்த்தாலும் மதிப்பெண்கள் பற்றிய வாழ்த்துகள் மற்றும் பதிவுகள் தான். இதையெல்லாம் பார்த்தபிறகு நம் மீமர்கள் சும்மா இருப்பார்களா.. அதனால்தான் அவர்களும் தங்கள் பங்கிற்கு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
வருடங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன என்பது, நாம் பார்க்க பிறந்து வளர்ந்த குழந்தைகள் பள்ளிக்கு, கல்லூரிக்கு போகும்போதும், திருமணமாகி செட்டில் ஆகும்போதும் தான் நமக்கேத் தெரிகிறது. அந்தவகையில் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அந்த மாணவர்கள் எந்த வருடம் பிறந்தவர்கள் என்ற புதிய விசயத்தைப் பகிர்ந்து, 'அட அதுக்குள்ள நமக்கு வயசாகிடுச்சா'.. என நெட்டிசன்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

தங்களது ஸ்டைலில் இந்த ஆச்சர்யத்தையும் மீம்ஸ்களாக்கி, "தோழி ஒருத்தவங்க 10வது பாஸ்னு ஸ்டேட்டஸ் போட்ருந்தாங்க.. நீங்களானு கேட்டா.. இல்ல என் பேத்திங்கறாங்க!" என்றும், கூடவே, "ஆக மொத்தம் இதோட 250 பேருக்கு என் மார்க்கை சொல்லிட்டேன்.. சியர்ஸ்!" என்றும், மாணவர்களின் மனநிலையையும், தங்களது பள்ளிகால நினைவுகளையும் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications