இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா?
சென்னை: இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா.. ஏன்டா இப்படி சோதிக்கிறீங்க என்று கிண்டல் செய்து நெட்டிசன் ஒருவர் மீம்ஸ் வெளியிட்டிருக்கிறார். மே 28ம் தேதியான நாளை மறுநாள் அப்படி என்ன ஸ்பெசல்.. ஏன் ஏராளமான திருமணங்கள் வரும் வியாழக்கிழமை நடக்க போகிறது.. வைகாசியில் வந்துள்ள இந்த சுபமுகூர்த்த தினம் பற்றி பார்பபோம்.
மே 28, 2026 (வியாழக்கிழமை) ஒரு மங்களகரமான சுபமுகூர்த்த நாள் ஆகும். இது வளர்பிறை முகூர்த்தம் ஆகும். தமிழ் தேதி: வைகாசி 14, பராபவ வருடம் (வியாழக்கிழமை).

திதி: மே 28 காலை 10:03 மணி வரை துவாதசி, அதன் பின் திரயோதசி திதி (வளர்பிறை - சுக்ல பட்சம்).
நட்சத்திரம்: காலை 10:11 மணி வரை சித்திரை நட்சத்திரம், அதன் பிறகு சுவாதி நட்சத்திரம்.
யோகம்: காலை 10:11 மணி வரை சித்தயோகம், அதன் பின் அமிர்தயோகம்.
சிறப்பு நிகழ்வுகள் மற்றும் விரதங்கள்:
பிரதோஷம்: இது வளர்பிறை பிரதோஷ நாளாகவும் வருகிறது.
அரசு விடுமுறை: அன்றைய தினம் பக்ரீத் பண்டிகை என்பதால் அரசு பொது விடுமுறை நாளாகும்.
அக்னி நட்சத்திர நிவர்த்தி: கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதியுடன் நிறைவடைகிறது.
நல்ல நேரம் (சுப முகூர்த்த நேரங்கள்):
காலை நல்ல நேரம்: 10:30 AM - 11:30 AM
மதிய நல்ல நேரம்: 12:30 PM - 01:30 PM
கௌரி நல்ல நேரம் (மாலை): 06:30 PM - 07:30 PM
தவிர்க்க வேண்டிய நேரங்கள் (இராகு, எமகண்டம்):
இராகு காலம்: 01:30 PM - 03:00 PM
எமகண்டம்: 06:00 AM - 07:30 AM
குளிகை: 09:00 AM - 10:30 AM
திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம், புதுமனை புகுவிழா மற்றும் புதிய தொழில் தொடங்க இது ஒரு மிகச் சிறந்த வளர்பிறை சுபமுகூர்த்த நாளாக மே 28ம் தேதி இருக்கிறது.
இப்படி சிறப்பு வாய்ந்த நாளாக இருப்பதால் பலரும் மே 28ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். நம்மூரில் பொதுவாக மாசி முடிந்த பின்னர் வைகாசியில் தான் திருமணம் நடத்த விரும்புவார்கள். பங்குனி, சித்திரை கோடைக்காலம் உக்கிரமாக இருக்கும் என்பதுடன், கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறும்... எனவே பொதுவாக திருமணம் என்பது பங்குனி சித்திரையில் அதிகம் நடக்காது. சித்திரையில் திருமணம் சிலர் வைப்பார்கள் என்றாலும், பெரும்பாலான மக்கள் வைகாசியில் தான் திருமணம் வைக்க விரும்புவார்கள். அதுவும் வைகாசியில் வளர்பிறை முகூர்த்தமே திருமண விஷேசத்திற்கு விருப்பமான நாளாக உள்ளது. அதுபோல் அன்றைய நாள் வளர்பிறை பிரதோஷம், வியாழக்கிழமை, அரசு விடுமுறை, பள்ளி திறப்புக்கு முன் என பல அம்சங்கள் அடங்கி உள்ளதால் மே 28ம் தேதி திருமணத்திற்கு உகந்த நாளாக இருக்கிறது.
ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இதுவரை 17 கல்யாண பத்திரிக்கை வந்திருக்கு மே 28ம் தேதிக்கு.. ஜூன் மாதம் உலகம் அழிய போகுதா.. ஏன்டா இப்படி சோதிக்கிறீங்க என்று கிண்டலாக குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். பலரும் பத்திரிக்கையை எடுத்து வந்த வண்ணம் இருப்பதை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
-
நம்மை காக்க வந்த தேவதூதன்டா அவன்.. வெளுத்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.. தெறிக்கும் மீம்ஸ்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?














Click it and Unblock the Notifications