இன்னைக்கு நம்மள என்னவெல்லாம் திட்டப் போறானோ.. தெரியலையே!
சென்னை : மனஅழுத்தத்தோடு, கடவுளுக்கும் தங்களுக்குமான உரையாடலை வைத்தும் விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மனக்கவலையைப் போக்குவதற்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரே இடம் கடவுளிடம் பேசுவதுதான். அதிலும் சமயத்தில் மிகவும் உரிமையாகத் திட்டக்கூட செய்கிறார்கள். சமீபகாலமாக அதை மீம்ஸ் போட்டும் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போதும் அப்படித்தான், மனஅழுத்தம் பற்றிய மீம்ஸ்களோடு, "இன்னைக்கு நம்மள என்னவெல்லாம் திட்டப் போறானோ.. தெரியலையே!" என கடவுளே கவலைப்படுவதாக நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, "வரைஞ்சா மனக்கவலை போகும்னு சொல்றாங்க... ஆனா, எனக்கிருக்க கவலைக்கெல்லாம் சீனப் பெருஞ்சுவரே வரைய பத்தாதேய்யா!" என நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியான மீம்ஸ்களால் இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications