ஸ்கூல் பீஸ் கட்டணும் ஓவர் ஓவர்.. உன் நகையை ஒருதடவை போட்டு பார்த்துக்கோ ஓவர் ஓவர்!
சென்னை : கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், மாணவர்களைவிட பெற்றோர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் கோடை விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் கடந்த சில வருடங்களாக வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதே மாதிரி இந்தாண்டும் விடுமுறையை நீட்டிப்பார்கள் என ஆசையில் இருந்த மாணவர்களின் கனவில் மழை தண்ணீரை ஊற்றி விட்டது.

அதனால் திட்டமிட்டபடி இன்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகள் நாளையும், நாளை மறுதினமும் திறக்க உள்ளன. புது வகுப்புக்குச் செல்வதால் மாணவர்கள் புத்தகப்பை, பேனா, வாட்டர்பாட்டில் என அனைத்தையும் புதுதாய் வாங்கும் மகிழ்ச்சியில் இருக்க, ஏற்கனவே பீஸ் கட்ட யாரிடம் கடன் வாங்குவது என்ற கவலையில் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என மாணவர்கள் பீல் பண்ணுவதாகவும், பெற்றோர்களோ சந்தோசப்படுவதாகவும் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications