காலாண்டு லீவு எப்போ விடுவீங்க சார்? ஸ்கூல் திறந்த முதல்நாளே இப்டி ஒரு சந்தேகமா?
சென்னை: இரண்டு மாத கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் காரணமாக இந்த வருடம் இன்று தான் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டிலேயே இருந்து ஃபோர் அடித்ததால், எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கும் என ஆர்வத்தோடு ஒரு குரூப் காத்திருந்து இன்று பள்ளிக்குச் சென்றிருக்கிறது என்றால், இந்த இரண்டு மாத விடுமுறையும் பத்தாது என, இன்று மழை பெய்தால் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை விடுவார்களா? என எதிர்பார்த்து ஏமாற்றத்தோடு மற்றொரு குரூப் பள்ளி சென்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஒரு வழியாக மீண்டும் பள்ளி திறந்து விட்டார்கள் என பெற்றோர்கள் தங்களது குதூகல மனநிலையை சமூகவலைதளங்களில் விதவிதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். மீமர்களும் தங்கள் பங்கிற்கு ஸ்கூல் ரீஓப்பனிங் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications