பொது வேட்பாளரை நிறுத்த போறாங்களாம்.. திமுகவோட சேர்ந்த ஒரே காரணத்தால்! அமைச்சர் வன்னி அரசு டென்ஷன்
சென்னை: அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபடும் நிலையில், இது குறித்து மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைச்சர் வன்னி அரசு காட்டமாக பேசியுள்ளார். தமிழ் தேசியம் பேசுகிறவன்.. பொது வேட்பாளராக நிற்க போகிறாராம். திமுக வந்து காங்கிரஸோடு சேர்ந்து ஈழத்தமிழர்களை அழித்துவிட்டார்கள் என்று யார் குற்றம் சொல்வது.. யார் அவதூறு பரப்பியது.. கடந்த காலங்களில் அது தான் நடந்தது" என்று கூறியுள்ளார்.
இந்து தேசியம் உருவானால் தேசிய இனத்தின் அடையாளம் அழிக்கப்படும், இதுகுறித்து தமிழ் தேசியவாதிகள் பேசுவதில்லை.. ஆனால் பொது வேட்பாளரை நிறுத்தப் போறோம்னு சொல்றாங்க என்று அமைச்சர் வன்னி அரசு காட்டமாக பேசியுள்ளார். இது தொடர்பாக வன்னி அரசு பேசியதாவது:-

தமிழ் தேசியம் பேசுகிறவர்கள்
இன்று ஒரே நாடு ஒரே மொழி என்பதை முன்னிறுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த ஒரே நாடு என்பது இந்திய தேசமாக இல்லாமல், இந்து தேசமாக முன்னிறுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட இந்து தேசம் உருவானால், தேசிய இனத்தின் அடையாளம் முற்றிலும் அழித்து ஒழிக்கப்படும். இது குறித்து தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் யாராவது பேச விரும்புகிறார்களா? அதுகுறித்து எதாவது கருத்து சொல்கிறார்களா? ஆனால் நாங்க தான் பொது வேட்பாளர் என்று போறாங்க..
யார் சொல்றது தமிழ் தேசியம் பேசுகிறவன்.. பொது வேட்பாளராக நிற்க போகிறாராம். நாங்க வந்து முன்னிறுத்தினால் திமுகவோடு வந்து சேர்கிறார்கள்.. திமுக வந்து காங்கிரஸோடு சேர்ந்து ஈழத்தமிழர்களை அழித்துவிட்டார்கள். யார் குற்றம் சொல்வது.. யார் அவதூறு பரப்பியது.. கடந்த காலங்களில் அது தான் நடந்தது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
திமுகவுடன் சேர்ந்த ஒரே காரணத்திற்காக திமுகவுடன் இணைந்து செயல்பட்டதன் ஒரே காரணத்திற்காக கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்த மண்ணிலே ஈழத்தமிழர்களுக்காக உண்மையாக உழைத்த.. உண்மையாக இருந்த.. உண்மையாக அர்ப்பணித்த மகத்தான தலைவர், எழுச்சி தமிழர் திருமாவளவன் மீது அவதூறு பரப்பிய கும்பல்.. இன்று அவர்களோடு இணைந்து பின்னி பிணைகிறார்கள். அது குறித்து யாரும் பேசுவதில்லை.
இதற்கு எல்லாம் என்ன காரணம், விசிகவை குறிவைப்பது.. தமிழகத்தில் உண்மையான அம்பேத்கர் இயக்கமாக, உண்மையான பெரியார் இயக்கமாக, உண்மையான தமிழ் தேசிய இயக்கமாக இருப்பது விசிக மட்டும் தான். இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் திருமாவளவனை அழைத்து தமிழ் தேசிய மாநாடு நடத்தியதற்கு வாழ்த்து செய்தியினை அனுப்பி இருப்பார்கள்" என்று கூறினார்.
சீமான் பொது வேட்பாளாரா?
அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா மற்றும் திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா செய்தது ஆகிய காரணங்களால் விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி தலைவர் உதயநிதியை சமீபத்தில் திருமண விழாக்களில் சீமான் சந்தித்து உரையாடியதும் இந்த பேச்சுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறி வருகிறார்கள். சீமான் பொதுவேட்பாளர் ஆக நிறுத்தப்பட உள்ளதாக வெளியாகும் பேச்சை வைத்து திமுகவை விசிக சமீப காலமாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், தான் அமைச்சர் வன்னி அரசும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.















Click it and Unblock the Notifications