மரம் வைங்கடானு சொன்னா.. பொங்கல் வச்சேன் பூரி வச்சேன்னு கதையா சொல்றீங்க.!
சென்னை : வெயிலில் வெளியில்தான் தலை காட்ட முடியவில்லை என்றால், சமூகவலைதளப் பக்கங்களிலும் வெயில்தான் மீம்ஸ்களாக சுட்டெரிக்கிறது.
வானிலை எப்படி ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றார்போல் மாறுகிறதோ, அதேபோல் நம் நெட்டிசன்களும் மீம்ஸ்களையும் மாற்றி விடுவார்கள். மழை காலம் என்றால் புயல், மழை, வெள்ளம் என வெளியில் இருப்பதைவிட காட்டமாக சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களில் மிதக்க விடுவார்கள். வெயில் காலம் என்றால் அதற்கு அப்படியே நேரெதிராக இருக்கும்.
அந்தவகையில் தற்போது நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என இப்போதே மீம்ஸ் போட்டு புலம்பத் தொடங்கி விட்டனர். ஒரு சிலர் நேரடியாக சூரியனிடமே, "உனக்கு தை மாசம் பொங்கல்லாம் வச்சோமே... நீ இப்போ எங்களை இப்டி பொங்க வைக்குறியே.. இது நியாயமா?' என டீல் பேச ஆரம்பித்து விட்டனர்.
அதற்கு சூரியனும் பதில் கூறுவதுபோல், "மரம் வைங்கடானு சொன்னா.. பொங்கல் வச்சேன் பூரி வச்சேன்னா கதை சொல்றீங்க.. இருங்கடா உங்களை பொளக்குறேன்!" என்பது மாதிரியான கற்பனைகள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications