ஒருவழியா பொங்கல் முடிஞ்சிருச்சி.. நா எங்க வீட்டு பிரிட்ஜ்ல இருந்த பொங்கலைச் சொன்னேன்!
சென்னை : சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை மீண்டும் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்றாலே பள்ளிக் குழந்தைகளைவிட மோசமாகப் புலம்புவார்கள் நம் நெட்டிசன்கள். அப்படியிருக்க, பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்வதென்றால் சும்மாவா? விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் என்பதால், மக்களுக்கு எப்போதுமே பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷல்தான். நான்கைந்து நாட்கள் தொடர்ந்து கிடைக்கும் விடுமுறையில், சொந்த ஊருக்கு அல்லது டூருக்கு கிளம்பி விடுவார்கள் நம் மக்கள். இப்படி விடுமுறையையெல்லாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடி விட்டு, திரும்பவும் திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் அவ்வளவு சீக்கிரம் நம் மக்களுக்கு மனது வந்து விடாது.
வழக்கமாக சனி, ஞாயிறு என வார இறுதிநாட்களை முடித்து, திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றாலே ரூம் போட்டு புலம்புவார்கள். அப்படி இருக்கையில் இந்த பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்வதென்றால், மீம்ஸ் போட்டு புலம்பாமல் இருப்பார்களா?
"பொங்கல் லீவெல்லாம் முடிஞ்சு போச்சு.. கிளம்பு கிளம்பு.. இனி மே மாசம்தான் லீவு!" என்றும், "ஒருவழியா பொங்கல் முடிஞ்சிருச்சி.. நா எங்க வீட்டு பிரிட்ஜ்ல இருந்த பொங்கலைச் சொன்னேன்!" என சைடு கேப்பில் வீட்டில் இருப்பவர்களையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..





















Click it and Unblock the Notifications