அடேய்.. மெதுவா கத்துடா.. என் பொண்டாட்டிக்கு கேட்டுடப் போகுது!
சென்னை: 'காதலுக்கு கண் மட்டுமல்ல.. மூளையும் கிடையாது.. அதனால்தான் காதலில் விழுந்தோர் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்' என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'காதலிக்கும் பெண்/ஆண் பாதி சாப்பிட்டுத் தரும் பஞ்சு மிட்டாய்கூட லட்ச ரூபாய்' என உருகி உருகிக் காதலிப்பார்கள் காதலில் விழுந்தவர்கள். அதே பஞ்சு மிட்டாயை திருமணத்திற்குப் பிறகு பாதி சாப்பிட்டு விட்டுத் தந்தால், 'உன்னாலதான் முழுசா சாப்பிட முடியாதுனு தெரியுமில்ல.. அப்புறம் எதுக்கு இப்டி காசைக் கரியாக்குற' என பத்து ரூபாய் பஞ்சு மிட்டாய்க்காக பத்து மணி நேரம் சண்டை போடுவார்கள். அதுதான் காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்.

இப்படி காதலுக்கும், திருமணத்திற்கும் இடையே உள்ள காலகட்டத்தில் வாழ்ந்து வருபவர்கள் நம்மூரில் ஏராளம். அதனால்தான் காதலர் தினம் வருகிறது என்பதை வைத்து, 'தப்பிச்சு ஓடிடுடா கைப்புள்ள..' என காதலில் விழுந்தவர்களை, விழ இருப்பவர்களை எச்சரிக்கும் வகையில் தங்களால் இயன்ற அளவு விழிப்புணர்வு (நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்குறாங்க) மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications