ஒரே ஒரு நாள்தான்.. இப்டி டோட்டல் சென்னையே பதறுதே.. டிசம்பர்லாம் நினைச்சுப் பார்க்கவே முடியலயே!
சென்னை மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழை வந்து விட்டாலே குடையைக் கையில் எடுக்கிறார்களோ இல்லையோ, படகு மீம்ஸை தூசி தட்டி விடுகின்றனர் நெட்டிசன்கள்.
2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது. மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது அந்தாண்டு கொட்டித் தீர்த்த மழை. பல இடங்களில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மக்கள் படகு மூலம் தான் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
அப்போது ஆரம்பித்தது இந்த மழைக்கால படகு மீம்ஸ்கள். சென்னையில் வசிப்பவர்கள் மழைக்காலங்களில் படகு வைத்திருந்தால் போக்குவரத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என கலாய்க்கத் தொடங்கினார்கள். அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து விட்டாலே போதும் படகு மீம்ஸ்கள் வைரலாகி விடும்.
இப்போதும் அப்படித்தான் பல சென்னை மழை மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.