567 நாளுக்கு அப்புறம் பசங்களுக்கு ஸ்கூலுனு சந்தோசமா இருந்தோமே.. இப்டி அதுல ‘தண்ணி’ய ஊத்திட்டீங்களே!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை: கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் மூடப்பட்ட ஆரம்பப்பள்ளிகள், சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளில் அட்ராசிட்டி செய்து வந்த ஆரம்பப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நேருக்கு நேர் சந்திக்கும் நாள் இது. எனவே பள்ளிகள் எல்லாம் திருவிழாகோலம் பூண்டது போல் காட்சியளிக்கின்றன.
ஆர்சிபி திருந்தவேயில்லை.. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 111, மொத்தம் அடிச்சதோ 156, கலாய்க்கும் மீம்ஸ்
வீட்டிலிந்து வெறுத்துபோன மாணவ, மாணவிகள் தங்களுடைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் ஆவலுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறார்கள். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய்விட்ட மாணவ செல்வங்கள், ஒருவரையொருவர் பார்க்கும் போது எப்படி ரியாக்ட் செய்வார்களோ? என்ற எதிர்பார்ப்பில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அப்படி சமூகவலைதளங்களில் சுற்றிச்சுற்றி வரும் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு..