வாழ்க்கையில்.. 10%தான் நிஜம்.. 90% வெறும் ரியாக்ஷன்தான்!
வாழ்க்கை என்பது நமக்குக் கிடைக்கும் அனுபவங்களில் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதமும் நாம் அதற்கு எப்படி ரியாக்ட் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எத்தனை பெரிய உண்மை பாருங்கள்.
எந்த ஒரு செயல் நடந்தாலும் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. சில நேரங்களில் சில விஷயங்களை வீட்டிலும் சரி வெளியிலும் சரி கண்டும் காணாமல் செய்வதே நலம்.
நம் வீட்டில் ஒரு நாள் உணவு நன்றாக இல்லையென்றால் ச்சே இதெல்லாம் ஒரு சாப்பாடா இதை மனி்தன் சாப்பிடுவானா உப்பில்லாத சாப்பாட்டைப் போட்டிருக்கியே என்று ரியாக்ஷன் கொடுக்காமல் அன்பே சிறிது உப்பு எடுத்து வா என்னவோ தெரியல இன்றைக்குக் கொஞ்சம் கம்மியா இருக்கு என்று கூறினால் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.
ஒரு விஷயத்தை மிகைப்படுத்திச் சொல்வதை விட அதை சாதாரணமாகவே சொல்லலாம். ஒருவர் கோபப்படும் போது எதிரில் இருப்பவரும் கோபப்படாமல் நிதானமாக இருப்பதே நலம். நீங்கள் வாழ்வில் உயர வேண்டுமானால் பயத்தை விட்டொழித்து வீரத்தோடும் விவேகத்தோடும் இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.
இன்று இருப்பவர் நாளை இருப்பாரோ என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.முடிந்தவரை சிறு சிறு பிரச்சினைகளுக்காக உறவினர்களோடும் நண்பர்களோடும் சண்டையிட்டுப் பெரிய பகையை உண்டாக்காதீர்கள். எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் வேண்டும்.
வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதை அடுத்தவர் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு செமையாக வாழ வேண்டும். எல்லாத்தையும் நிஜம் என்று நம்பாதீர்கள். பத்து சதவீதம் தான் நிஜம் மத்ததெல்லாம் ரியாக்சன் தான். வாழ்க்கையில் நிஜத்தை மட்டும் பாருங்க ரியாக்ஷனைக் குறைங்க.