கணக்குப் போட்டு வாழக் கூடாதுகணக்குப் போட்டு வாழக் கூடாது.. அனுபவித்து வாழ வேண்டும்!
சிலர் சொல்வார்கள்.. கணக்குப் போட்டு வாழ்க்கையை வாழ்கிறான் என்று.. அது தவறுங்க.. வாழ்க்கையை நல்லா அனுபவிச்சு வாழ வேண்டும். அதுதாங்க நிஜமான அனுபவம்.. நிஜமான வாழ்க்கை.
எல்லாவற்றுக்கும் கணக்குப் போட்டுக் கொண்டே போனால் என்னாகும்.. திரும்பிப் பார்த்தால் எல்லாமே குழப்பமாதான் தெரியும்.. சந்தோஷம் இருக்காது.. அமைதி இருக்காது.. ஒரு திருப்தி இருக்காது.. எதுக்காக வாழ்ந்தோம்னே புரியாமல் கூட போகும். ஆனால் நாம் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் அனுபவிச்சு வாழ்ந்து பாருங்க.. அதை விட சொர்க்கம் வேற என்னங்க இருக்க முடியும்.
கணக்குப் போட்டு வாழ்வது தவறில்லை ஆனால் நம் வாழ்க்கை அந்த கணக்குக்குள்ளேயே முடிந்து விடக் கூடாது. சில சந்தோசங்களை அனுபவிக்க நாம் கணக்குப் பார்க்கக் கூடாது. நம் பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு நல்ல உடைகள் எடுத்துத் தர வேண்டும். உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை மாதத்தில் ஒரு நாளாவது உண்ணுங்கள்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பார்கள். வாழும் தெய்வங்களாகிய நம் பெற்றோரிடம் கணக்குப் பார்க்கக் கூடாது. நம் பிள்ளைகளின் தேவைகளைப பூர்த்தி செய்ய கணக்குப் பார்க்கக் கூடாது. நமக்கு மற்றொரு தாயாக விளங்கும் நம் சகோதரியிடமும் நம் மனைவியிடமும் கணக்குப் பார்க்கக் கூடாது. பிள்ளைகளின் எதிர்காலத்திற்குச் செலவு செய்யுங்கள்.
Friday Vibes: பூமியே சொர்க்கம்.. செம்மையா வாழ வேண்டும்!
உங்கள் பெற்றோரி்ன் ஆசைகளை நிறைவேற்றுங்கள். உங்கள் மனைவியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள். பணம் இன்று வரும் நாளை வரும் ஆனால் சின்ன சின்ன சந்தோசங்களை அந்த தருணத்திலேயே அனுபவித்து விட வேண்டும். நம்முடன் இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே தனி சுகம் தானே. நம் குடும்பத்திற்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் சிறு சிறு சந்தோசங்களுக்காச் செலவு செய்வதில் தவறில்லை.
நமகக்குப் பிடித்த விஷயங்களுக்கும் செலவு செய்வதில் தவறில்லை. வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழுங்கள். உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள்.
நாம் இவ்வுலகை விட்டுப் போகும் போது ஒரு ரூபாய் கூட நம்மிடையே எடுத்துச் செல்லப் போவதில்லை அதனால் இருக்கும் ஒரு வாழ்க்கையை கணக்குப் போட்டு வாழாமல் நம் ஆசைகளை நிறைவேற்றி நாமும் மகிழ்ச்சியாக வாழலாமே.