பிரச்சினைன்னு வந்துருச்சா.. அது சிக்கல் அல்ல.. வழிகாட்டி!
ஒருவருக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அது அவருக்கான சிக்கல் அல்ல. மாறாக ஒரு சிக்கலிலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான வழிகாட்டியாக அது அமையும். எனவே எந்த சிக்கல் வந்தாலும் அதை சிரித்தபடி சந்தியுங்கள், சீரிய முறையில் சமாளியுங்கள்.
எந்த சிக்கல் வந்தாலும் துணிந்து செயல்படுங்கள். பிரச்சினை இல்லாத வாழ்க்கை ஏது. தடைக்கற்களையெல்லாம் படிக்மற்களாக்கி சாதனை செய்பவன் தான் சிறந்த மனிதன். தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். வீட்டில் அம்மியில் அரைத்து கால்களும் கையும் வலித்ததால் தான் மிக்ஸி உருவானது. இன்று உலகம் முழுவதும் கொரோனா என்னும் பிரச்சினை வந்ததால் கலவி கற்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அதற்கு மாற்றாக ஆன்லைன் வகுப்புகள் வந்துவிட்டது. பிரச்சினைகள் உருவாக உருவாக உங்களது கண்டுபிடிப்புகளால் நீங்கள் உங்கள் வாழ்வில் உயர்ந்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
பிரச்சினை இல்லாத வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை சவாலானதும் கூட ஆனால் அப்பிரச்சினைகளுக்கான வழியைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி பிரச்சினையைத் தீர்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. பிரச்சினைகள் ஏற்படும் போது அதைக் கண்டு பயப்படாமல் அதைத் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நொடியும் புதிய தொடக்கமே!
நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதை நாம சமாளிக்க வேண்டும். பிரச்சினைகள் நம்மைச் செதுக்குகின்றன. நமக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கிறது. பிரச்சினைகள் வந்தால் டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி.