அதுவும் காதல்.. இதுவும் காதல்!
வாழ்க்கையில் 2 விஷயங்களுக்காக நாம ஏங்குவோம்.. ஒன்று காதல் வயப்பட மாட்டோமா.. காதல் நமக்கு கை கூடாதா என்று ஏங்குவோம்.. இன்னொரு விஷயமும் உண்டு. அது என்ன தெரியுமா.. இந்தக் காதல் இப்படியே நீடிக்காதா.. என்பதுதான் அது.

காதலுக்கு மட்டும்தாங்க அந்த உயர்ந்த அந்தஸ்து உண்டு. வேறு எந்த அன்புக்கும் கூட இல்லாத பெருமையும், பெருமிதமும் காதலுக்கு மட்டுமே உண்டு. காதலித்துப் பாருங்கள் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும் என்பார்கள்.. அது உண்மைதான்.
காதலிப்பவர்களைப் பார்க்கும் போது நமக்கும் இப்படி ஒரு காதல் கிடைக்காதா என்று ஏங்கும் சிலர் காதலில் விழுந்தவுடன் அந்த காதலை தக்க வைத்துக் கொள்ள படாதபாடுபடுவார்கள். காதல் வயப்படும்போது தன் துணையை நினைத்து உருகுவார்கள்.
காதல் என்பது ஒரு சுகானுபவம். காதலிக்க ஆரம்பித்து விட்டால் நம் துணையின் நினைவைத் தவிர வேறெதும் இருக்காது. என் தேவதையை எப்போது பார்ப்பேன் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். விஷயம் இருக்கிறதோ இல்லையோ மணிக்கணக்கில் பேசுவார்கள். தம் துணைக்கு பிடித்த மாதிரி உடை அணிந்து அவர்களுக்குப் பிடித்த உணவை உண்பார்கள்.
காதல் இல்லாதவர்கள் நமக்கும் இப்படி ஒரு காதல் ஏற்படாதா என ஏங்குவார்கள். எனக்கு இவ்வாறு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி கற்பனையில் தன் துணையை எண்ணி இருப்பார்கள். கண்ணால் பார்க்கும் யாவும் காதலன் காதலியின் முகமே. எங்கு பார்த்தாலும் தன் துணை தன்னோடு இருப்பது போல் ஒரு உணர்வு.
கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு உள்ளம் பரிமாறிக் கொள்வதே காதல். காதலியின் தலைமுடி குஞ்சலம் பென்சில் பேனா இப்படி தன் துணையின் நினைவாக பல பொருள்கள் நம்மிடம் இருக்கும். இரவானாலும் பகலானாலும் எப்போதும் உன் நினைவு தான் உன்னோடு ஆயுள்வரை மகிழச்சியோடு வாழ வேண்டும் நீயில்லையேல் நானில்லை உன்னையே நினைத்திருக்கிறேன் ஜோடி சேர காத்திருக்கிறேன் என்று கவிதை எழுதாதவர்கள் கூட காதலில் விழுந்தவுடன் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்.
காதல் வயப்பட்டவர்கள் உங்கள் காதலை இறுதிவரைத் தொடர்வதற்குப் போராடுங்கள். காதல் இல்லாதவர்கள் இந்த காதலர் தினத்தில் உங்கள் துணையைத் தேர்ந்தெடுங்கள். இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் என்பது போல உங்கள் துணை உங்களுக்காகக் காத்திருக்கிறார். கண்டதும் காதல் பார்காமலே காதல் பேசாமலே காதல் சேராமல் காதல் ஆனால் எல்லாமே காதல் தான்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications