ராணுவத்துக்கு பகுதி நேர வீரர்களைத் தேடும் இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அரசின் மன்னிப்பதை தெடார்ந்து ராணுவத்தை விட்டுவிட்டு ஓடிய வீரர்கள் மீண்டும் ராணுவத்துக்கு திரும்பி வருகின்றனர்.

ராணுவத்தை விட்டுவிட்டு இடையில் ஓடியவர்களுக்கு எந்தத் தண்டனையும் விதிக்கப்படாது மீண்டும் அவர்கள் இணையலாம் என அரசு அறிவித்திருந்தது. இதைத் தெடார்ந்து இதுவரை 3,019 வீரர்கள் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.

இதுவரை சுமார் 10,000 வீரர்கள் ராணுவத்திலிருந்து ஓடிவிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போல் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு இது பெரும் மானப் பிரச்சினையானது.

இதையடுத்து வீரர்கள் படைகளுக்குத் திரும்ப இலங்கை 1 வார கால அவகாசம் வழங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலக்கெடு டிந்தது. இக் காலகட்டத்தில் சுமார் 3,000 வீரர்கள் மீண்டும ராணுவத்தில் சேர்ந்தனர்.

இதையடுத்து காலக்கெடுவை வரும் 5-ம் தேத வரை இலங்கை நீட்டித்துள்ளது.

ஆனால், ராணுவத்தில் புதிதாக 15,000 பேரைச் சேர்க்கும் இலங்கை அரசின் யற்சிகள் பலனளிக்கவில்லை. இதுவரை 1,176 பேர் மட்டுமே ராணுவத்தில் சேர ன் வந்துள்ளனர்.

இதனால் பகுதி நேர வீரர்களைச் சேர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தின்படி வேறு பணிகளில் இருப்போர் போர்க் காலத்தின்போது மட்டும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றலாம். கடந்த 22-ம் தேதி தொடங்கிய இத் திட்டம் மார்ச் இறுதி வரைத் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+