For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை இருக்காது - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் வரை சென்னை நகரில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெவித்தார்.

சென்னையில் நருபர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னையில் சமீபத்தில் பெய்த மழையால் நிகருக்கு குடிநீர் வழங்கும் 3 நீர்த் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து கணிசமாக இருந்தது. தற்போது பூண்டியில் 344 மில்லியன் கனஅடி நீரும், செம்பரம்பாக்கம் ஏயில் 426 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது. சோழவரம் நீர்த்தேக்கத்தில் 6474 மில்லியன் கனஅடி நீரும் உள்ளது.

சென்னை நகர் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வீராணம் ஏயிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை தமிழக கைவிட்டுவிட்டது. பல ஆய்வுகளில் இத் திட்டத்தால் அதிக பலன் இருக்காது என்று கண்டறியப்பட்டதால் அத்த திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், வீராணம் ஏயிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.

இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி அடுத்த பொதுத் தேர்தல் வெற்றிக்கான அறிகுறி மட்டுமல்ல, திமுக அரசு தங்களுக்கு எதிரான அரசு அல்ல என்பதை மக்கள் நினைத்து இத்த தீர்ப்பை அளித்துள்ளனர். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2001-ல் நடைபெறும். அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் கருணாநிதி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X