For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை கவர்னர் மாளிகையில் அதிகாரி கொலை

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை கவர்னர் மாளிகையில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

மலபார் மஹில்ஸ் பகுதியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்திலேயே உள்ள தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்திலேயே அவர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டுக் கிடந்தார்.

சுக்தேவ் மேக்ராம் தகோர் (56) என்ற அவர் முதல் நிலை அதிகாரியாவார். ஆளுநிர் மாளிகையில் துணைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்து வந்தார். இவரது கழுத்து, வயிறு, நெஞ்சு, கையில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.

துணை முதல்வர் வீட்டில் போலீஸ்காரர் தற்கொலை

இதற்கிடையே துணை முதல்வர் சகன் புஜ்பாலின் வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த காவலர் துல்சிராம் (28) தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு தனித் தனி சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நிடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X