வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கொழும்பு குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் ராணுவம்
கொழும்பு:கொழும்பில் வெள்ளிக்கிழமை நிடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில்19 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்களைத் கண்டுபிடிப்பதற்காக இலங்கை ராணுவம் மற்றும் போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சனிக்கிழமை மாலை நிாடாளுமன்றக் கட்டடம் அருகே, பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அனிருத்தா ரத்வத்தேயின் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென 10 பேர் வந்து கார் வசை மீது துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர். அப்போது ஒருவர் திடீரென தனது உடலில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் ஆறு போலீஸார் உள்பட 19 பேர் இறந்தனர். அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சனிக்கிழமை மேலும் 5 பேர் மருத்துவமனையில் இறந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
விடுதலைப் புலிகள்தான் இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று இலங்கை பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. இதையடுத்து விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொடர்பானவர்களிடம் ராணுவம் மற்றும் போலீஸார் விசாரணை நிடத்தி வருகின்றனர். கொழும்பு ழுவதிலும் தேடுதல் வேட்டையும் நிடந்து வருகிறது.
நிாடாளுமன்றக் கூட்டம் மற்றும் நிார்வேயில் அமைதிப் பேச்சுவார்த்தை நிடந்து கொண்டிருக்கும் க்கியமான சூழ்நலையில், தலைநிகல் நிடந்துள்ள இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு நிகல் மேலும் பல விடுதலைப் புலிகள் மறைந்திருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது. இதையடுத்து நிகர் ழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும், தேவைப்பட்டால் மட்டும் வெளியே வருமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
தப்பிய நிால்வர் குண்டு வைத்துத் தற்கொலை:
இந்த நலையில் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தப்பியோடிய நிான்கு விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் தெற்கு கொழும்பு நிகலுள்ள பொல்லா என்ற பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் கண்டுபிடித்தது. ஒரு வீட்டுக்குள் அவர்கள் ஒளிந்திருந்தனர். அவர்களை வெளியே வந்து சரண் அடையுமாறு ராணுவத்தினர் வலியுறுத்தினர். ஆனால் அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் ராணுவ வீரர்கள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நிடத்தினர்.
இதையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நிடத்தினர். பதிலுக்கு விடுதலைப் புலிகளும் துப்பாக்கியால் சுட்டனர். விடியி விடிய நிடந்த இந்த சண்டையின் இறுதியில் நிான்கு விடுதலைப் புலிகளும் தங்களிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டனர்.