வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சேலம் உருக்காலை விவகாரம்: தொழிற்சங்கப் பிரநதிகள் - மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
டெல்லி:
சேலத்தைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரதிநதிகள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆகியோரைச் சந்தித்து சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
எட்டு பேர் கொண்ட இக்குழுவினர், சுரங்கத்துறை அமைச்சர் திலீப் ராய், பெட்ரோலியத்துறை அமைச்சர் பொன்னுசாமி, கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜா, மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரைச் சந்தித்தனர்.
சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கினால் பிரச்சனைகள் மிகப்பெய அளவில் உருவாகும். மேலும் தமிழக அரசியல் கட்சிகள் உள்பட எல்லா தரப்பினரும் சேலம் உருக்காலை தனியார்மயமாக்கக்கூடாது என்றே விரும்புகின்றனர். அரசு தனியார்மயமாக்கும் டிவை எடுத்தால் நிாங்கள் எல்லாவிதப் போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications