வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியன் வங்கியில் கொள்ளை யற்சி மர்மக்கும்பல் கைவசை
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டில் இந்தியன் வங்கியில் கொள்ளை யற்சி நிடந்தது. ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டிருந்த அலாரம் ஓசை எழுப்பியதில் கொள்ளைக் கும்பல் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
ஞாயிற்றுக் கிழமை நிள்ளிரவு மர்மக் கொள்ளைக் கும்பலொன்று வங்கியின் கதவுகளை இரும்புத்தடியால் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.
பின்னர் ரொக்கப்பணம் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் அறைக்குள் புகுந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அபாய மணி அடிக்க ஆரம்பித்தது. இதனால் நிடுங்கிப் போன அக்கும்பல் தலைதெறிக்க அந்த வங்கியிலிருந்து தப்பியோடிவிட்டது.
திங்கள் கிழமை காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் வங்கி திறந்து கிடப்பதையும், அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது.
மோப்பநிாய்ப்படை, கைரேகைநபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் இதுவரை இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
புலன்விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆறாவது றையாக இதே வங்கியில் கொள்ளை யற்சி நிடந்ததாகத் தெய வந்துள்ளது.
யு.என்.ஐ.