முகத்தில் தெளித்த சாரல்...
மேற்கிந்தியத் தீவுகளுடன் தல் டெஸ்ட்: ஜிம்பாப்வே அதிர்ச்சித் தோல்வி
போர்ட் ஆப் ஸ்பெயின்:
போர்ட் ஆப் ஸ்பெயினில் ஜிம்பாப்வேக்கு எதிரான தலாவது கிக்கெட் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
99 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி அதிர்ச்சியான வகையில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துவக்க ஆட்டக்காரர் கிரான்ட் பிளவர் 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஸ்கோலேயே அவுட்டானார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோஸ் சிறப்பாகப் பந்து வீசி 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆம்புரோஸ் 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வால்ஸ் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ன்னதாக தனது இரண்டாவது இன்னிங்ஸை திங்கள்கிழமை தொடர்ந்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜிம்பாப்வே வீரர் ஹீத் ஸ்டீக் சிறப்பாகப் பந்து வீசி 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தல் இன்னிங்ஸில் பெற்ற 49 ரன்கள் லம் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில் ஜிம்பாப்வே இருந்தது.
இப் பாட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் கருதினர். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி ஜிம்பாப்வே வீரர்களை அவுட்டாக்கி தங்கள் அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆம்புரோஸ் ஆட்ட நிாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.