வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா கிக்கெட்: இந்திய பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறல் - 146 ரன்களுக்கு ஆல்-அவுட்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் வியாழக்கிழமை நிடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 146 ரன்கள் எடுத்துள்ளது.
கோக-கோலா கோப்பைக்காக வியாழக்கிழமை நிடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் மோயின்கான் டாஸ் வென்று தலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
புதன்கிழமை நிடந்த தல் போட்டியில் தென் ஆப்பிக்காவிடம் தோற்ற இந்தியா, இப்போட்டியில் சிறப்பாகப் பந்து வீசியது. இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க டியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர்.
அணியில் ஸ்கோர் ஒன்றாக இருந்தபோது துவக்க ஆட்டக்காரர் சாஹித் அஃபிதி அவுட்டானார். உடனே அப்துர் ரசாக்கும் அவுட்டானார். 5 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தவித்தது. இம்ரான் நிசீரும், இன்சமாம் உல் ஹக்கும் நன்று ஆடியதால் பாகிஸ்தான் ஓரளவு ரன்கள் எடுத்தது.
இறுதியாக 45.3 ஓவல் 146 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இம்ரான் நிசீர் 43 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக இன்சமாம் உல்-ஹக் 41 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் பிரசாத், கும்ளே, ஜோஷி ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராபின் சிங், அகார்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வீரர்களில் பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் வீரர்கள் தொடர் இடைவெளியில் அவுட்டாகியவண்ணம் இருந்ததால், அதிக ரன்களைக் குவிக்க டியவில்லை.
தென் ஆப்பிக்காவுடன் ஆடிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீநிாத்துக்குப் பதிலாக வெங்கடேஷ் பிரசாத் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஸ்கோர்:
பாகிஸ்தான் 45.3 ஓவல் 146 ரன்கள். (இம்ரான் நிசீர் 43, இன்சமாம் உல்-ஹக் 41. கும்ளே, பிரசாத், ஜோஷி தலா 2 விக்கெட்டுகள்).