வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பஞ்சாபில் வேளாண்துறை வளர்ச்சிக்காக நவீன திட்டங்கள் அறிமுகம்
ராஜ்புரா (பஞ்சாப்):
வேளாண் துறை வளர்ச்சிக்காகவும், வேளாண்துறைகளில் புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதற்காகவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் அறிவித்துள்ளார். இந்த திட்டங்களினால் வேளாண்துறைகளில் துரிதமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
ஹிமாலயன் ஃபோர்சான் லிமிடெட் மற்றும் பஞ்சாப் அக்ரோ இண்டஸ்ட்ரியின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இந்தியாவில் குறிப்பாய் பஞ்சாப்பில் வியாபாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள். இங்கு இந்த வியாபாரத்தை நம்பியே 70 சதவீத மக்கள் வாழ்கின்றனர். வேளாண் துறையை மாற்றி அமைப்பதற்காக பஞ்சாப் அரசு பல கோடி ரூபாயில் ஆண்டுதோறும் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துகிறது. இதை வேளாண்தொழில் செய்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வேளாண் துறையினரின் நலனை முன்னிட்டு பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகம் நவீனப்படுத்தப்படுகிறது. அங்கு மாணவர்கள் மேம்பாடடையும் வகையில் ஆராய்ச்சி நிலையம், பரிசோதனைக் கூடம் அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் மாணவர்களும், வேளாண்துறை வல்லுநர்களும் வேளாண்துறையின் வளர்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களின் நலனிற்காக அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தும்இவ்வாறு அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications