வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சுரங்கம் மற்றும் தாது உற்பத்தித் துறையை சிறு தொழில் பிரிவில் சேர்க்க கோரிக்கை
திருச்சி:
சுரங்கம் மற்றும் தாது உற்பத்திப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில் பிரிவுகளை சிறு தொழில் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு தாது மற்றும் சுரங்கப் பொருள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் குளித்தலை பன்னீர் செல்வம் மற்றும் பொருளாளர் சி.ஆர்.சண்கம் ஆகியோர், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் ரங்கராஜன் குமார மங்கலத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
சுரங்கத்திற்கான உரிமம் வழங்கும்போது, அதுதொடர்பான வெடிபொருட்களை வாங்குவது மற்றும் சேகரித்து வைத்திருப்பது போன்றவற்றிற்கும் உரிமம் வழங்க வேண்டும்.
தற்போதுள்ள சுரங்கச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இதன் மூலம் சுரங்கத்திற்கான உரிமத்தைப் புதுப்பிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும்.
புதிய சலுகைகள் மூலம் சிறிய அளவில் இயங்கி வரும் சுரங்கப் பிரிவுகள் பாதிக்கப்படும். எனவே இந்தப் பிரிவுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவற்றை, சிறுதொழில் பிரிவுகளில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
யு.என்.ஐ.