வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆந்திராவில் கிராமப்புற மக்களுக்கு இன்டர்நெட் வசதி: முதல்வர் நாயுடு
ஹைதராபாத்:
ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து சிறிய கிராமங்களும் பயனடையும் வகையில் இன்டர்நெட் வசதிகளை அறிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு கூறினார்.
திங்கள்கிழமை சட்டசபையில் அவர் பேசுகையில், இன்டர்நெட் மையங்கள் மூலம் கிராம மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமின்றி ஈ காமர்ஸ் போன்ற துறையினால் கிராம மக்களின் பொருளாதார நிலையும் மேம்பாடு அடையும் என்றார்.
திங்கள்கிழமை சட்டசபையில் அவர் கூறுகையில், ஃபைபர் ஆப்டிக் கேபிள் நிெட்வொர்க் என்ற இன்டர்நெட் மையம் கிராமங்கள் முழுவதும் பயனடையும் வகையில் இன்டர்நெட் மையத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. அது தவிர கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்களுக்கு வேண்டுமானால் நேரடியாக ஃபைபர் ஆப்டிக் கேபிள் நெட்வொர்க்குடன் தொடர்பு கொண்டு இன்டர்நெட் இணைப்புகளைப் பெறலாம்.
அலையன்ஸ் நறுவனம் கிராமங்களில் இந்த நெட்வொர்க் இணைப்புகளைத் தர ஒப்புதல் அளித்துள்ளது. கிராமங்களுக்கு சாட்டிலைட் இணைப்புக்கள் கொடுக்கவும் போதுமான முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த நெட் இணைப்புகளினால் விவசாயிகள் பலரும் விவசாயத்தில் புதிய, பயிர்செய்யும் முறையை அறிந்து கொள்ளலாம் என்றார்.
நிதிஅமைச்சர் ராமகிருஷ்ணநாயுடு கூறுகையில், கிராமப்புற மக்கள் வறுமை ஒழிப்பு குறித்து விழிப்படையும் வகையில் கிராம பஞ்சாயத்துக்களுக்கு கூடுததலாக இன்டர்நெட் இணைப்புக்கள் கொடுக்கப்படும். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் வெகு துரிதமாக நடந்து வருகின்றது என்றார்.
முன்னதாக சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலில் கிராமங்களில் போதிய அளவு மின்சார வசதியோ, தொலைபேசி வசதியோ இல்லை. அதற்கு முதலில் நீங்கள் நடவடிக்கை எடுங்கள். பின்னர் இன்டர்நிெட் குறித்து ஆலோசனை செய்யலாம் என்று கூச்சலிட்டார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications